×

தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி, செப்.26: தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தகோபாலபுரம் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு முக்கியத் தேவையான சாலை வசதி, குடிநீர், கழிவுநீர் ஓடை, தெருவிளக்கு வசதி போன்றவை முறையாக இல்லை.இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூகவிரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை தொடர்கிறது. இதனை தவிர்த்திட மின்விளக்கு வசதி செய்து கொடுத்திடுவதுடன், இங்குள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் துரிதமாக செய்து கொடுத்திடவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.


Tags : collector ,facilities ,Tuticorin Nandakopalapuram ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...