×

சுங்கத்துறை சரக பகுதியில் தூய்மை பணி

முத்துப்பேட்டை, செப்.26: முத்துப்பேட்டை சுங்கத்துறை சரகத்திற்குட்பட்ட உட்பட்ட உறந்தைராயன்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து அனைத்து தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி துவக்கம் தலைமையாசிரியர் சேகர் தலைமையில் நடைபெற்றது. சுங்கத்துறை டிஎஸ்பி தனபால் தூய்மை பணியை துவக்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகள் தூய்மைபடுத்தப்பட்டது.மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுமக்கள் மத்தியில் மாணவர்கள் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Tags : Customs area ,
× RELATED ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம்