×

27ல் சிறப்பு குறைதீர் முகாம் 11 தாலுகாவில் நடக்கிறது

திருச்சி, செப்.25: திருச்சி மாவட்டத்தில் வரும் 27ம் தேதி வருவாய்த்துறை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய்த்துறை சார்பில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 27ம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:திருச்சி கிழக்கு தாலுகாவில் கே.சாத்தனூர் (தெற்கு), திருச்சி மேற்கில் பிராட்டியூர் (மேற்கு), திருவெறும்பூரில் எல்லக்குடி (6 அகரம் உட்பட), ரங்கத்தில் அந்தநல்லூர், மணப்பாறையில் செக்கணம், மருங்காபுரியில் கவிநாரிப்பட்டி, லால்குடியில் ஜங்கமராஜபுரம், மண்ணச்சநல்லூரில் பூனாம்பாளையம், முசிறியில் கோணப்பம்பட்டி, துறையூரில் கோம்மை, தொட்டியத்தில் தோளூர்ப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி பெறலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : grievance camp ,taluka ,
× RELATED காவல்துறை சிறப்பு குறைதீர் முகாம்