×

கோரிக்கைளை நிறைவேற்ற கோரி பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினர் எம்பியிடம் மனு

திருச்சி, செப்.25: அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், திருச்சிக்கு வந்திருந்த எம்பி துரை ரவிக்குமாரிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.பிஎஸ்என்எல் நிறுவனம் நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க, பிஎஸ்என்எல் புத்தாக்க திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். நிதி ஆதாரத்திற்கு குறைந்த வட்டியில் லோன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் காமராஜ், எம்பி துரை ரவிக்குமாரிடம் இந்த கோரிக்கை மனுவை அளித்தார். மேலும் பிரதமர், நிதி அமைச்சர், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேச வேண்டும் என்று எம்பியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான உதவிகள் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும், பிரதமர், நிதியமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் எம்பி துரை ரவிக்குமார் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சசிகுமார், துணைச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : BSNL Officers Association ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி