லால்குடி, செப்.25: லால்குடியை அடுத்த பூவார் பேரூராட்சி பகுதியில் திருச்சி-அரியலூர் சாலையில் ஊராட்சி அலுவலகம் மற்றும் வங்கிக்கு சென்று வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியும், இதனை தொடர்ந்து லால்குடி அருகே கோமாக்குடியில் ரூ.27 லட்சத்தில் பங்குனி வாய்க்காலின் இடையே அடுத்தடுத்து கடந்து செல்ல உதவியாக 2 பாலங்கள் கட்டும் பணி நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பயணியர் நிழற்குடை மற்றும் சிறு பாலங்களை திறந்து வைத்தார். இதில் பூவார் பேரூராட்சி செயல் அலுவலர் ஜவகர், லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ரவிச்சந்திரன், வடக்கு தமிழ்செல்வன், நகர செயலாளர் துரைமாணிக்கம் உள்ளிட்ட கட்சியினர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.