×

மணிகண்டத்தில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சி பணி கலெக்டர் ஆய்வு.

திருச்சி, செப்.25: திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.90.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மணிகண்டம் ஒன்றியம், கே.கள்ளிக்குடி, பெரியநாயகி சத்திரம், மாத்தூர், சேதுராப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 12 வளர்ச்சிப் பணிகள் ரூ.90.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதலெட்சுமி, மருததுரை, மணிகண்டம் ஒன்றிய பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு