×

மாமியாரை கொன்ற மருமகனை பிடிக்க தனிப்படை போலீசார் வேலூரில் தேடுதல் வேட்டை

சேலம், செப். 25: சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளிபாளையம் அருகே பாப்பான்காட்டை சேர்ந்த சண்முகம் மனைவி பேபி(55). இதே பகுதியில்  விவசாயநிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.அவருடைய மகள் தீபா(31). இவருக்கும், நடராஜ் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜ் இறந்ததால், நாமக்கல் மாவட்டம் வெப்படையிடில் உள்ள நூற்பாலைக்கு தீபா வேலை சென்று வந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீபாவிற்கும், வேலூர் மாவட்டம் துரைப்பாடியைசேர்ந்த லாரி டிரைவர் கணபதி (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணபதி அடிக்கடி போதையில் ஊதாரித்தனமாக இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

கடந்த 22ம்தேதி மாமியார் வீட்டுக்கு வந்த கணபதி, தன்னுடன் மனைவியை அனுப்பி வைக்கமாறு கேட்டுள்ளார். அப்போது பேபி அவரை திட்டி அனுப்பி வைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணபதி, மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு பேபி கதவை திறந்ததும், அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, வீட்டுக்கு வெளியே தாழிட்டு தப்பிச் சென்றார். தகவலறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மனைவியை வாழ அனுப்பி வைக்காமல் தடுத்து வந்த மாமியாரை மருமகன் ெகாலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய கணபதியை தேடி வருகின்றனர். கணபதி வேலூரில் பதுங்கி இருக்கலாம் என ரகசியதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் வேலூர் மாவட்டம் துரைப்பாடியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  

Tags : son-in-law ,Vellore ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...