×

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுைற சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு

ஊட்டி, செப். 25:    பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.    பள்ளி காலாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது. இதனால் நாளை முதல் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்திலும் பள்ளி விடுமுறை மற்றும் தசரா பண்டிகை விடுமுறை அடுத்த வாரம் முதல் வருகிறது.மேலும், தமிழகத்திலும் ஆயுத பூஜை விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருகிறது.  இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள்அதிகரிக்கும். ஏற்கனவே இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...