×

செப்.27ல் திமுக கூட்டணி முழுஅடைப்பு போராட்டத்துக்கு கொமதேக எஸ்.டி.பி.ஐ ஆதரவு ஆதரவு

கோவை, செப். 25:  கொங்குநாடு மக்கள்  தேசிய  கட்சியின் (கொமதேக)  கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  சிங்காநல்லூரில்  நேற்று முன்தினம் நடந்தது. கோவை  கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கருப்புசாமி தலைமை  தாங்கினார். கோவை  கிழக்கு  மாவட்ட செயலாளர் தனபால் வரவேற்றார். இதில், திமுக கூட்டணி  சார்பில்  கோவையில் வரும் 27ம்தேதி நடைபெறும் முழு  அடைப்பு  போராட்டத்துக்கு கொமதேக முழு ஆதரவு அளிக்கிறது. பொதுமக்களும்,  வணிகர்களும்    இப்போராட்டத்திற்கு முழு  அதரவு அளித்து, போராட்டத்தை  வெற்றிபெற செய்ய   வேண்டும்.’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதுபற்றி  கோவை  கிழக்கு மாவட்ட செயலாளர் தனபால்  கூறுகையில், ‘‘மக்களை வாட்டி  வதைக்கும் 100 சதவீத சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும். சூயஸ்  நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்ய  வேண்டும். இல்லையேல், போராட்டம் தொடரும்’’ என்றார். கூட்டத்தில்,  மேற்கு மாநகர  செயலாளர் பிரேம்,  இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை நிலைய  செயலாளர் வடிவேல் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு   கூட்டம் :

மாவட்ட தலைவர் ராஜா உசேன்  தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது இசாக் முன்னிலை வகித்தார். இதில்திமுக கூட்டணி சார்பில் கோவையில் வரும் 27ம்தேதி நடைபெறும் முழு  அடைப்பு போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவு அளிக்கிறது. பொதுமக்களும்,  வணிகர்களும்  இப்போராட்டத்திற்கு முழு  அதரவு அளித்து, போராட்டத்தை  வெற்றிபெற செய்ய வேண்டும்.’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில செயற்குழு  உறுப்பினர்  முஸ்தபா, வர்த்தக அணி  மாநில இணை செயலாளர் அப்துல் கரீம், மாவட்ட  நிர்வாகிகள் அன்சர் செரீப், சிவக்குமார், அப்துல்காதர், அப்பாஸ், உம்மர்  ஷெரீப், உசைன், செய்யது இப்ராகீம், ரவூப் நிஸார், அப்துல் ரகீம், மன்சூர்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Komadeka SDPI ,alliance ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி