×

மாணவருக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

தூத்துக்குடி,செப்.25:  தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த  திருமணி(25) என்பவர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்ததுடன் பள்ளி விடுதியிலும் தங்கியுள்ளார். இந்நிலையில் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 17 வயது மாணவர் ஒருவருக்கு இரவு நேரங்களில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் அலுவலர்களுக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சைல்டு லைன் குழுவினர் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் திருமணி, மாணவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியர் திருமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags : Teacher ,student ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...