×

ஏரல் தாமிரபரணியில் அலைச்செடிகள் அகற்றம்

ஏரல், செப். 25: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக என்எஸ்எஸ் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா என்எஸ்எஸ்  நாளினை முன்னிட்டு தாமிரபரணி தூய்மை பணி திட்ட துவக்க விழா ஏரலில் நடந்தது. துவக்க விழாவிற்கு ஆதித்தனார்  கல்லூரி என்எஸ்எஸ்  அலுவலர் கதிரேசன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், பல்கலைக்கழக சமூகவியல்துறை இணைப் பேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியினை என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் துவக்கி வைத்தார்.

இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி, கே.ஜி.எஸ் கலைக்கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆற்றில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் ஏரல் சேர்மன் கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், நச்சுக்கழிவுகள், அமலை செடிகளை அப்புறப்படுத்தினர்.

நிறைவு விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தூய்மைப் பணிகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை பாராட்டி பேசுகையில், “நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்ககூடிய தாமிரபரணியை காப்பது நமது கடமை. இந்த பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றார். கீதாஜீவன் எம்.எல்.ஏ, சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டிய நாடார், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினார். கீதாஜீவன் கல்லூரி தீபன்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மலர்விழி செய்திருந்தார்.

Tags : Removal ,Plants ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...