×

நாசரேத்தில் பனைவிதை நடும்விழா

நாசரேத், செப். 25: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் என்எஸ்எஸ் சார்பில் பனை விதைகள் நடும் விழா நடந்தது. தலைமை வகித்த கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதர்சமூக சேவை நிறுவனம், ஜல் சக்திஅபியான் திட்டம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி, ஒருங்கிணைப்பாளர் பானுமதி மற்றும் அமைப்பாளர்கள் செல்வகுமார், சரண்ராஜ் தலைமையில் ஆயிரம் பனைவிதைகள் நடப்பட்டன. இதில் மாணவர்கள் 80 ேபர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
 ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெபச்சந்திரன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ், என்எஸ்எஸ் அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ்,  பிரபாகர், ஜேம்ஸ் ஹம்பிரே, ஆசீர்பால்சன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Palmyra Festival ,Nazareth ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்