×

திருச்செந்தூரில் வாலிபரை தாக்கியவர் கைது

திருச்செந்தூர், செப். 25:  திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் சுனாமி நகரை சேர்ந்த மணி மகன் கன்னிமுத்து(22). இவரது தங்கையும் உறவுக்காரப்பெண்ணும்  புளோமி நகர் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அடைக்கலாபுரத்தை சேர்ந்த பிரவீன்(19) என்பவர் பைக்கில் செல்லும் போது கன்னிமுத்துவின் தங்கையை இடிப்பது போல் சென்றுள்ளார். இதுகுறித்து அவர்  கன்னிமுத்துவிடம் தெரிவித்ததால் அவர் பிரவீனிடம்  கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து கன்னிமுத்து மற்றும் உறவினர்கள்  பங்குத்தந்தையிடம் பேச முயன்றனர். இதையறிந்த பிரவீன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து  கன்னிமுத்துவை வழிமறித்து தாக்கினார். இதில் காயமடைந்த அவர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி பிரவீனை கைது செய்தனர். அவரது நண்பர்கள் அடைக்கலாபுரம் சிவா, கவாஸ்கர், வசந்த், கபில் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...