×

ஆறுமுகநேரி, காயாமொழி ஆத்தூரில் நாளை மின்தடை

திருச்செந்தூர், செப்.  25: அவசர பராமரிப்பு காரணமாக ஆறுமுகநேரி, காயாமொழி, ஆத்தூர் பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்தடை ஏற்படும் என திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் பிரபாகர்  கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர்  கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி, துணை மின்நிலையத்தில் அவசரகால  பராமரிப்பு பணி நாளை (26ம் தேதி) நடக்கிறது. இதனால் ஆறுமுகநேரி, துணை  மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் துணை மின்நிலையங்களான குரும்பூர்,  காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் துணை மின்நிலையங்களில்  இருந்து மின்னூட்டம் பெறும் புன்னகாயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை,  காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தலவாய்புரம்,  திருச்செந்தூர், சங் கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர்,  அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி,  தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம்,  திருக்களூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை (26ம் தேதி) காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை  மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Arumuganeri ,Gaiyogazhi ,Athur ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?