×

ஓய்வு பெற்ற ஆசிரியையை தாக்கி கொலை மிரட்டல்

விருதுநகர், செப்.25: விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சங்கரீஸ்வரி(62). ஆசிரியையாக வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது கணவர் ராமகிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில், மகனுடன் வசித்து வருகிறார். இவரின் கணவரின் முதல் மனைவி மகன் குருவராஜ்(48) நேற்று காலை சங்கரீஸ்வரி வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆமத்தூர் போலீசில் சங்கரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : teacher ,murder ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...