×

ராஜபாளையம் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் அள்ளப்படாத மணல்

ராஜபாளையம், செப். 25: ராஜபாளையம் நகர் பகுதியில் தேவையற்ற மணல் மேடுகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர் பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெறும் வேளையில் சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அமைத்து வருகிற பணிகள் முடிந்த நிலையில் எஞ்சிய மணல்களை ஆங்காங்கே ஜேசிபி இயந்திரங்களைக்கொண்டு சாலையிலேயே குவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அதை அப்புறப்படுத்த நிலையில் பெரிதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்றும் அதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘நகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பணிகள் அனைத்து வார்டுகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. எந்த ஒரு பணிகளையும் பாதுகாப்பற்ற நிலையில் செய்து வருவதாகவும், எனவே ஒவ்வொரு பகுதியாக பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும்  ராஜபாளையம் நகர் மக்களின் நலன் கருதி அனைத்து பணிகளையும் உடனடியாக நிறைவேற்றி புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajapalayam Nagar ,
× RELATED சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு