தேனி, செப். 25:தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேனி நகர் பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆலன், முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பெத்தாட்சி ஆசாத் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரியும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் பாதுகாப்பையும், பலன்களையும் தொடர்ந்து வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ராஜ்குமார், அஜ்மல்கான், ஆதிமூலம், இளையராஜா, ராமச்சந்திரன், ராஜா, செங்கொடிசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.