×

நல்லாசிரியருக்கு பள்ளியில் பாராட்டு

பெரியகுளம், செப். 25: தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியில் வடுகபட்டியைச் சேர்ந்த உமாபதி தொழில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த செப்.5ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அவரை பாராட்டி வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளியின் கல்விக்குழு தலைவர் சுசீலா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். விழாவில், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் உமாபதிக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஏராமானோர் கலந்து கொண்டனர்.

Tags : school ,teacher ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி