×

போராட்டம் ஒத்திவைப்பு சுரங்கனாறு நீர்வீழ்ச்சி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு கம்பம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

கம்பம், செப். 25:கம்பம் அருகே உள்ள கூத்தனாட்சி வனப்பகுதியில் நோய் தாக்கி பெண் யானை இறந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேகமலை வன உயிரின சரணாலயத்தில் சிறுத்தை, புலி, மான், யானை, காட்டு எருமை போன்ற விலங்குகளும், அரியவகை மரங்களும் உள்ளன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட நாராயணத்தேவன்பட்டி பீட், கூத்தனாட்சி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் படுத்திருப்பதை கண்டனர்.

இதுகுறித்து கம்பம் கிழக்கு ரேஞ்சர் ஜீவனாவிடம் தகவல் கொடுத்துள்ளனர். இரவு நேரமானதால் அலுவலத்திற்கு திரும்பிய வனத்துறையினர், நேற்று காலை ரேஞ்சர் ஜீவனா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது யானை படுத்த இடத்திலேயே இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து வனத்துறை யினர் மேகமலை வன உயிரின சரணாலய உதவி வன பாதுகாவலர் குகனேஷ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் காமேஷ் கண்ணன், கலைவாணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானை இறந்து கிடந்த பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், இறந்த யானை சுமார் 25 முதல் 30 வயதுடைய பெண் யானை என்றும், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags : fight ,woods ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது