சிவகங்கை, செப்.25: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காரைக்குடி ஓ.சிறுவயலில் செயல்படும், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடம் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத தொகுப்பூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி, ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி மற்றும் கணினி சான்றிதழ் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். https://sivaganga.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து 07.10.2019க்குள் ‘கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம், ஓ.சிறுவயல், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்- 630 208’ என்ற முகவரியில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.