×

100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, செப். 25:  சிவகங்கை யூனியன் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் முடிகண்டம், மீனாட்சிபுரம், பாசாங்கரை, சக்கந்தி, சாலூர், பாப்பாகுடி, நாமனூர், வேங்காம்பட்டி, மங்காம்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். இக்கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். மங்காம்பட்டி கிராமத்தில் குடிநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பிகா தலைமை வகித்தார். மாநில செயலாளர் பூங்கோதை, மாவட்டத் தலைவர் தண்டியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் வேங்கையா, மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்கருப்பன்,  பஞ்சவர்ணம், லெட்சுமி, பாண்டி, ராஜலெட்சுமி, பாண்டியம்மா, விஜயா, நாச்சம்மாள், ஜெயா, தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : labor demonstration ,
× RELATED மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்