×

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா செப்.30ல் தொடக்கம்

அலங்காநல்லூர், செப். 25: மதுரை அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோயிலின் உப கோயிலாக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ விழா வரும் 30ம் தேதி காலை 7 மணியிலிருந்து 7.29 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9 மணியிலிருந்து 9.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், அன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

அக்.1ம் தேதி காலை கிருஷ்ணாவதாரமும், 2ம் தேதி காலை ராமர் அவதாரமும், 3ம் தேதி காலை கஜேந்திர மோட்சமும், 4ம் தேதி காலை ராஜாங்கசேவையும், 5ம் தேதி காலை காளிங்கநர்த்தனமும், 6ம் தேதி காலை சேஷசயனமும், 7ம் தேதி காலை வெண்ணைதாழியும், 8ம் தேதி காலை திருத்தேரோட்டம், இரவு புப்பல்லக்கு நிகழ்ச்சியும், 9ம் தேதி பூச்சப்பரமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் தேதி காலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அன்று காலை 7.31 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் பெருமாள் தேவியர்களுடன் தெப்பத்திற்கு எழுந்தருளி 10.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 11ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Pattasi ,festival ,Madurai Tallakulam Perumal ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...