×

விபத்துகளை தடுக்க வத்தலக்குண்டு நூலக பகுதியில் வேகத்தடை கட்டாயம் வேண்டும்

வத்தலக்குண்டு, செப். 25: விபத்துகளை தடுக்க வத்தலக்குண்டு நூலக பகுதியில் வேகத்தடை கட்டாயம் அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு நூலகம் அருகே அஞ்சலக சாலை, அக்ரஹாரம் சாலை, கடைவீதி சாலை, மாரியம்மன் கோயில் சாலை என நான்கு சாலைகள் சந்திக்கின்றன. கடைவீதியிலிருந்து வாகனங்களிலில் வருவோருக்கு பூங்கா மறைப்பதால் அக்ரஹாரத்திலிருந்து வரும் வாகனங்கள் தெரியவதில்லை. அதேபோல அக்ரஹாரம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு கடைவீதியிலிருந்து வரும் வாகனங்கள் தெரியவதில்லை.

இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கருப்பையா கூறுகையில், ‘இந்த நான்கு சாலை சந்திப்பில் நான் பார்க்க இதுவரை 7 விபத்துக்கள் நடந்துள்ளது. நல்ல வேலையாக பெரிய அளவில் ஆட்களுக்கு சேதமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய விபத்துக்கள் நடக்கும் முன்னால் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : accidents ,Wattalakundu Library ,area ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...