×

லாரி மோதி வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம், செப். 25: ஒட்டன்சத்திரம் அருகே கீழனூரை சேர்ந்த பரமசிவம் மகன் பாலு (23). இவர் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். தங்கச்சியம்மாபட்டி அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Lorry ,
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...