×

தினக்கூலி பணியை நிரந்தரமாக்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், செப். 25: தினக்கலியை நிரந்தரமாக்க கோரி திண்டுக்கல்லில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டில் மாவட்ட ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் பழனியப்பன், துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஏஐடியுசி கவுரவத்தலைவர் துரை சந்திரமோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு வீடு கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தும் பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வீடு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட தொழிலாளர்களை நலவாரியத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் தினக்கலியாக பணிபுரியும் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட துணை செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

Tags : Protests ,construction workers ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...