×

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, செப். 25: உளுந்தூர்பேட்டை அருகே புதுநன்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி புஷ்பா(40). இவரது கணவருக்கும், இதே கிராமத்தில் வசித்து வரும் வேலு என்பவருக்கும் இடையே தந்தை வழி சொத்து பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பா மற்றும் அவருடன் இருந்த ரோஜா(21) ஆகிய இரண்டு பேரையும் வேலு உள்ளிட்ட 4பேர் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சடையப்பிள்ளை மற்றும் போலீசார் புதுநன்னாரம் கிராமத்தை சேர்ந்த வேலு, களமருதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், மணிகண்டன், கணேசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து கார்த்திக்(20), வேலு(48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Ulundurpet ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது