×

அதிகாரிகள் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மொரட்டாண்டி புறவழிச்சாலையில் செல்லும் பேருந்துகளால் பயணிகள் கடும் பாதிப்பு

வானூர், செப். 25: வானூர் தாலுகா மொரட்டாண்டி புறவழிச்சாலையில் அரசு பேருந்துகள் இயங்குவதால் பயணிகள் பாதிக்கப்படுகிறன்றனர். சென்னை, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், விரைவுப்பேருந்துகள் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வழியாக புதுச்சேரி செல்லாமல் மொரட்டாண்டி- இரும்பை புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் அலைகழிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டு செல்கின்றனர்.

இவ்வாறு பயணிகளை இறக்கிவிடுவதால் 2 கி.மீ தூரம் பெண்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடன் நடந்துவரவேண்டியுள்ளது. இந்த பகுதிகளில் வழிப்பறி நகை மற்றும் பணம் திருடு ஆகியவை அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. பலமுறை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தும் மீண்டும் தொடர்ச்சியாக பேருந்துகள் திருச்சிற்றம்பலம் வருவதில்லை. எனவே புறவழிச்சாலையாக செல்லாமல் பேருந்துகள் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வழியாக அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...