×

பொன்னமராவதியில் வெள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி, செப். 25: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பருவமழை வௌ்ளப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் வௌ்ளப்பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, பாதிப்பில் இருந்து மீட்டவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




Tags : meeting ,Ponnamaravathi ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...