×

காங்கிரஸ் நிர்வாகி குற்றச்சாட்டு என்எஸ்எஸ் பொன் விழாவையொட்டி மன்னார்குடி அரசு கல்லூரியில் இளையோர் நல விழா

மன்னார்குடி, செப். 25 :
நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் 50 ம் ஆண்டு பொன் விழாவை யொட்டி மரம் நடுதல் மற்றும் இளையோர் நல விழாமன்னார்குடி ராஐ கோபால சுவாமி அரசுகல்லூரியில் நடைபெற்றது. நிகழ்சிக்கு கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர் மாறன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் நோக்கங் கள், அதன் செயல்பாடுகள் மற்றும் 50 ஆண்டு கால பொன் விழா காணும் என் எஸ் எஸ் அமைப்பு ஆற்றிய சேவைகள் குறித்து மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜப்பா பேசினார். கல்லூரி முதல்வர் (பொ) ரவி இளையோர் நல விழாவை துவக்கி வைத்து நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமை கள் குறித்தும், என் எஸ் எஸ் மாணவர்கள் ஆற்றி வரும் தன்னிகரில் லா சேவைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் என்எஸ்எஸ் பொன் விழாவையொட்டி மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் என்எஸ்எஸ் அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். பசுமை கரங்கள் அமைப்பின் நிறுவனர் கைலாசம் மரக் கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் மரக் கன்றுகளை நட்டனர். முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலகர்கள் சத்தியா தேவி வரவேற்றார். முடிவில் ஆகாஷ் நன்றி கூறினார்.



Tags : administrator ,Congress ,ceremony ,NSS ,Mannargudi Government College ,
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...