நீடாமங்கலம்,செப்.25: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டார வேளாண் பகுதிகளில் கடந்த பருவத்தில் சம்பா,தாளடி நடவு அறுவடை முடிந்து தற்போது ஆதனூர், முன்னாவல் கோட்டை, பெரியகோட்டை, காளாச்சேரி,சித்தமல்லி,பரப்பனாமேடு,கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி செய்துள்ள நெல் கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.தற்போது மாலை நேரங்களில் பெய்து வரும் காற்றுடன் கூடிய மழையால் அறுவடை செய்யும் கதிர்கள் தரையில் படிந்துள்ளதால் மகசூல் குறைவு ஏற்படுகிறதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.