×

தோகைமலை அருகே மூதாட்டி கொலையில் மகன், பேரன் கைது

தோகைமலை, செப். 25: கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சரகம் தொண்டமாங்கிணம் ஊராட்சியில் உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பூவாயி (76). இவரது பேரன் பிரசாத். நில பிரச்னை தொடர்பான முன் விரோதத்தில் இவரை பூவாயியின் மகன் வடிவேல்(60), அவரது மகன் ஆறுமுகம்(37) மற்றும் குடும்பத்தினர் தாக்கினர். இதனை தடுக்க முயன்ற பூவாயியை வடிவேல், ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த பூவாயி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து வடிவேலையும், ஆறுமுகத்தையும் கைது செய்தனர்.

Tags : grandson ,murder ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...