×

ஒரத்தநாடு அருகே பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

ஒரத்தநாடு,செப்.25: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாட்டை சேர்ந்தவர் ராமையன் ஆசிரியர். இவரது மகன் ஆதிநாராயணன் (36). இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் திருவோணம் ஒன்றிய தலைவராக பணியாற்றியவர். நேற்று முன்தினம் மாலை ஆதிநாராயணன் பைக்கில் பாப்பாநாட்டிலிருந்து பட்டுக்கோட்டை-தஞ்சை மெயின்ரோட்டில் வந்துக்கொண்டிருந்தார். அவருடன் வடக்குக்கோட்டையை சேர்ந்த மணி (55) என்பவரும் உடன் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ஆதிநாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த மணி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : vehicle crashes ,Orathanadu ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...