×

200 திருக்குறளை தடையின்றி ஒப்புவித்த யு.கே.ஜி மாணவன்

காரைக்கால், செப்.25: காரைக்காலில் 200 திருக்குறளை தடையின்றி ஒப்புவித்து வரும் யு.கே.ஜி பயிலும் மாணவனை, காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் பாராட்டியது.காரைக்கால் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.சாய் சேஷாங் (4). இவர் காரைக்காலில் தனியார் (பிரைட் அகாதெமி) பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக திருக்குறளை தமிழில் தடையின்றி மனப்பாடமாக ஒப்பித்து வந்தார். தொடர்ந்து, கடந்த சில வாரமாக 200க்கும் மேற்பட்ட திருக்குறளை தடையின்றி சரளமாக ஒப்புவித்து வருகிறார்.இந்த மாணவனின் திறமையை கண்ட, காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம், மன்ற ஆலோசனைக்குழு தலைவர் கலைமாமணி காரைசுப்பையா இல்லத்துக்கு சிறுவனை வரவழைத்து 200 குறளை ஒப்பிக்கச் சொல்லி ஆய்வு செய்தனர். அப்போது தடையின்றி சுமார் 200 திருக்குறளை மிக சரளமாக ஒப்பிவித்த சிறுவனுக்கு மன்ற நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி பாராட்டினர். நிகழ்ச்சியில் தமிழ்மாமணி புலவர் திருமேனிநாகராசன், தமிழாசிரியர் மணியன், மாமன்ற துணைத் தலைவர் கவிஞர் தங்கவேலு, பொருளார் மோகன் உள்ளிட்ட பலர் சிறுவனுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Tags : UGG student ,Tirukkurals ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை...