பொன்னேரி, செப்.25: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில்மீஞ்சூர் அடுத்த வல்லூரில் உள்ள இளைஞரணி அலுவலகத்தில் நேற்று இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. இதற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் கணேஷ், கிரிதர் சூரியராஜ், சரண்ராஜ் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நாளை (26ம் தேதி) காணிபாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை மறுநாள் (27ம் தேதி) வாயலூர் பஜாரில் உறுப்பினர் சேர்க்கை முகாம், 29ம் தேதி அனுப்பம்பட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் இளைஞர்கள் சேர்ந்து கழக பணியில் ஈடுபடுமாறு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.