பொன்னேரி, செப்.25: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மணிகண்டன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழையின்போது புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, மீட்பு பணிகளை துரிதமாக எப்படி செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.