×

பெண்ணை ஆபாச படம் எடுத்த வழக்கில் மயிலாப்பூர் டாக்டர் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து சிக்கிய டாக்டரை சைதாப்பேட்டை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 26.04.2018 அன்று அந்த பெண்ணும், அவரது கணவரும், மயிலாப்பூர் நாட்டு சுப்பராயன் தெருவில் உள்ள டாக்டர் சிவகுருநாதனின் கிளினிக்கிற்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர். அப்போது, கணவர் இது குறித்து டாக்டரிம் தெரிவித்துள்ளார். அதற்கு டாக்டர், பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது என்று கூறி கணவரை வெளியே அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் ஆபாசமாக படம் எடுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியே வந்த அந்த பெண், இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், டாக்டரின் செல்போனை கேட்டார். ஆனால் டாக்டரோ தன்னிடம் இருந்த புகைப்படங்களை அழித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது புகார் அளித்த பெண் சாட்சியளிக்கையில், சிகிச்சைக்காக சென்றபோது டாக்டர் என்னை புகைப்படம் எடுத்தார். இது குறித்து என் கணவரிடம் தெரிவித்தபோது அவர் உணர்ச்சிவசபட்டு செல்போனை பிடிங்கினார். இதனையடுத்து புகார் அளித்தோம். ஆனால் அதன்பின்னர் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தபோது தான், சிகிச்சையின் போது மார்பு பகுதியில் உள்ள கட்டிகளை டாக்டர்கள் அப்படிதான் பரிசோதிப்பார்கள் என்று தெரியவந்தது. எனவே டாக்டர் மீது நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். மேலும் அரசு தரப்பும் டாக்டர் மீதான குற்றத்தை நிரூபிக்கவில்லை. இதனால் நீதிபதி, புகார் அளித்தவர் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார், மேலும் அரசு தரப்பும் குற்றத்தை நிரூபிக்கவில்லை என்று கூறி டாக்டரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Tags : Mylapore ,doctor ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது