×

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் பொறியாளர் தினவிழா

குமாரபாளையம், செப்.24: குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில், பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் தலைமை தாங்கி பேசினார். நிர்வாக இயக்குனர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் நல்லுசாமி வாழ்த்தி பேசினார். விழாவில் மேச்சேரி ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில் பொறியியல் துறையில் இந்தியா வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது. புதிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பொறியாளர்களின் தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இயந்திரவியல் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பொறியியல் படிப்புடன் அந்த துறை சார்ந்த அறிவுகளை வளர்த்துக்கொண்டால் தான் விரைவான வளர்ச்சியை பெற முடியும் என்றார்.  துறைத்தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். பேராசிரியர் விஜய்பாபு நன்றி கூறினார்.

Tags : Engineer's Day ,Excel College ,Kumarapalayam ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா