×

சேந்தமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி மாணவன் பலிசேந்த

மங்கலம், செப்.24: சேந்தமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேந்தமங்கலம் மேற்கு அருந்ததியர் தெருவைச் சேர்ந்த முத்து, பாப்பாத்தியின் மகன் அரவிந்த்(14). கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்து இறந்து விட்டார். இதனால், பாப்பாத்தி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். அரவிந்த் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினமான நேற்று முன்தினம், அரவிந்த் நண்பர்களுடன் விளையாட சென்றான். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பாப்பாத்தி சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில், பச்சுடையான்பட்டி அருகே தேன்கரடு பகுதியில் உள்ள குட்டையில் அரவிந்த் சடலமாக கிடப்பது தெரியவந்தது. சேந்தமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், நண்பர்களுடன் குட்டையில் இறங்கி குளித்த அரவிந்த், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அறியாத நண்பர்கள், அரவிந்த் வீடு திரும்பியிருப்பான் என எண்ணி அவரது தாயாரிடம் தெரிவிக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : student ,hut ,Sandamangalam ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...