×

உத்தனபள்ளியில் சிதிலமான சாலையை சீரமைக்க கோரிக்கை

சூளகிரி, செப்.24: சூளகிரி அடுத்த உத்தனபள்ளியில் புரம்தின்னா ஏனுசோனை சாலை, சுமார் 2 கி.மீ தூரத்திற்கு, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், அப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் பாதி வழியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை