×

ஆதனூர் அண்ணாநகரில் வசிக்கும் 70 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கோரிக்கை

திருவாரூர், செப்.24: நீடாமங்கலம் ஆதனூர் அண்ணாநகரில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சி அண்ணா நகரில் உள்ள சாமந்தன் வாய்க்கால் கரையில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 70 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா இல்லாத காரணத்தினால் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக ஆக முடியாத நிலை இருந்து வருகிறது.இதுகுறித்து பலமுறை தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மேற்படி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் இந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்காத பட்சத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Tags : families ,Anna Nagar ,Adhanoor ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...