×

பங்களாவாசல் முதல் சிவன் கோயில் வரை சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் தமுமுக வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, செப்.24: முத்துப்பேட்டை பங்களாவாசல் முதல் சிவன் கோயில் வரை சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமுமுக சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.முத்துப்பேட்டை பேரூராட்சியில் தாசில்தார் ராஜன்பாபு தலைமையில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:முத்துப்பேட்டை பங்களா வாசலில் முதல் பேட்டை சிவன் கோயில் வரை உள்ள சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது அதனை மீண்டும் துவங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முத்துப்பேட்டை நகரில் ஆடு, மாடுகள், பன்றிகள், நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இவைகள் அப்புறப்படுத்த வேண்டும், கழிவு நீர் தொட்டிகள் மக்கள் வசிக்கும் பகுதியில் திறந்த நிலையில் உள்ளதால் பல தொற்றுநோய்கள் பரவி வருகிறது இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். முத்துப்பேட்டை நகரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கொடுக்காமல் உள்ளது.அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்கவேண்டும் இதுபோன்று பேரூராட்சி நிர்வாகத்தால் பல்வேறு மக்கள் பணிகள் சரிவர நடக்காமல் பாதிப்பு அடைந்துள்ளது.இதனை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து சரி செய்யவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ராஜன்பாபு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Bangladesh ,Shiva Temple ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...