×

சனிதோறும் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, செப். 24: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை, மாவட்ட செயலாளர் கவியரசு தலைமை வகித்தனர். மாநில செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்கள் உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நீதிமன்றதால் எந்த தடையாணையும் பிரப்பிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் வேண்டுமேன்றே காலதாமதப்படுத்தி வருகிறது. இதனால் விரைந்து மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஏராளமான தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Dasildar ,office ,Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்