×

உண்டு உறைவிட பள்ளிகளை நடத்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,செப்.24: உண் டு உறைவிட பள்ளியினை ஏற்று நடத்துவதற்கு தகுதி வாய்ந்த அரசுசாரா தொண் டு நிறுவனங்கள் விண்ண ப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதா வது : ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி 2019-20ம் ஆண் டு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்ஒன்றியம்,காரை ஊராட்சிக்குட்பட்ட மலைய ப்ப நகர் குடியிருப்பு பகுதி யில் புதிதாக தொடங்கப்ப ட்டு, செயல்பட்டுவரும் உண்டு உறைவிட பள்ளியி னை ஏற்று நடத்துவதற்கு தகுதி வாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மாவ ட்டத் திட்ட ஒருங்கிணைப் பாளர் அலுவலகம், ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம் பலூர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப் பங்களை உரிய ஆவணங் ககளுடன் அளிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 2ம் தேதி மாலை 5.45மணியாகும். இதுகுறித்து 04328 225355, 9788858814 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.


Tags : NGOs ,host boarding schools ,
× RELATED வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டும்:...