×

ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல்

நாங்குநேரி, செப். 24: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு விண்ணப்பத்தை வாங்கிய பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் நிருபர்களிடம் கூறியதாவது:  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி தலைவர் ராக்கெட் ராஜா எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இந்த இடைத்தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே நாங்குநேரி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்னைகளை அலசியுள்ளோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாமல் விட்டுள்ள பல அம்சங்களை தேர்தலின்போது வாக்காளர்களிடம் எடுத்துச் சென்று வாக்கு கேட்போம். வருகிற 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றார். தொடர்ந்து நாங்குநேரி பஸ் நிலைய பகுதியில், ஹரிநாடார் பிரசாரத்தை துவக்கினார்.

Tags : Democratic ,by-election ,
× RELATED பெரம்பலூரில் ரயில்வே திட்டம்...