×

பாண்டவர்மங்கலம் கண்மாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்

கோவில்பட்டி, செப். 24: பாண்டவர்மங்கலம் காமராஜர் நகர் கண்மாயை தூர்வாரக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜீவ்நகர், காமராஜ்  நகர், இபி காலனியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இப்பகுதியில் தற்போது நிலத்தடி நீராதாரம் படிப்படியாக குறைந்து விட்டதால்,  குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில்  காமராஜர், இபி காலனி பகுதியில் நரியூத்து எனும் பெயரில் மிகப்பெரிய கண்மாய்  உள்ளது. ஆனால் இந்த கண்மாய் நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால், கண்மாயில்  முட்செடிகள், புதர்களாக மாறிவிட்டது.

 இதனால் வரும் பருவமழை  தொடங்குவதற்கு முன்பாக இந்த கண்மாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி  சுத்தப்படுத்தவும், கண்மாயின் கரைகளை உயர்த்தி கட்டவும், இப்பணிகளை செய்து  முடித்தால் இப்பகுதியில் வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடாது  என்றும், இதனால் கண்மாயை தூர்வாரவும், காமராஜர் பகுதியில் நந்தவனம் அமைத்து  தரவும் வலியுறுத்தி இபி காலனி, காமராஜர் நகர் குடியிருப்போர்,  நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இதன் தலைவர் ஆண்டியப்பன், செயலாளர்  மாரிமுத்து தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஆர்டிஓ  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை ஆர்டிஓ  விஜயாவிடம் வழங்கிச் சென்றனர்.

Tags :
× RELATED ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மோசடி...