தூத்துக்குடி, செப். 24: கிராம சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடப்பதால் செவிலியர் கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
எனவே, செவிலியர் படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சான்று பெற்று இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் இன்று (24ம் தேதி) மாலைக்குள் தங்களது அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் உதவி இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 97ஜி-4ஜி, ஆசிரியர் காலனி முதல் தெரு (கிழக்கு), தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.