×

புழல், செங்குன்றம் பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து : வாகன ஓட்டிகள் அவதி

புழல்: புழல், செங்குன்றம் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை புழல், கதிர்வேடு, கல்பாளையம், லட்சுமிபுரம், ரெட்டேரி, காவாங்கரை, சாமியார் மடம் மற்றும் பாடியநல்லூர் எம்.ஏ.நகர், ஆலமர பகுதி, பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும், இவைகள் சாலைகளிலேயே படுத்து உறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் பலர் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் புழல், செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “செங்குன்றம் பகுதி சாலைகளில் மாடுகள் உலா வருவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. நடந்து செல்பவ    ர்களை மாடுகள் முட்டிவிடுகிறது. சாலையில் திரியும் மாடுகள் திடீரென குறுக்கே  ஓடுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால், அவ்வழியாக  செல்லும் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். எனவே, மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்றனர்.

Tags : Accidents ,road ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி