×

தஞ்சையில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சை,செப்.24: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கீழ்தளத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை வகிக்க உள்ளார். இதில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவித்து தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : meeting ,asylum ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...