மயிலாடுதுறை, செப்.24: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோமல் பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இக்கடையில் மேர்பார்வையாளராக பணியாற்றிவருபவர் அம்பல் ரமேஷ்(41). இவர் நேற்றுமுன்தினம் இரவு கடையில் பணியில் இருந்தபோது கோமல் கள்ளிமேடு கணேசன் மகன் பாலு என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரும் சென்று ஓசியில் மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். அதற்கு மேர்பார்வையாளர் தர மறுத்துள்ளார்.
நாங்கள் கேட்டால் தரமாட்டியா என்று கேட்டு அங்கே கிடந்த உருட்டுக்கட்டையால் மேர்பார்வையாளர் ரமேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த பொருட்களை போட்டு உடைத்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்து சென்றனர். காயமடைந்த ரமேஷ் பாலையூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலு மற்றும் மதனை தேடி வருகின்றனர்.