×

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

காஞ்சிபுரம், செப்.24: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா 111வது பிறந்தநாளையொட்டி மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ  தலைமையில் மாபெரும் கருந்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி தொடங்கி வைத்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிப்பாதையில் திமுக என்ற தலைப்பில் தருமபுரி எம்பி செந்தில்குமார், அண்ணா அன்றும், இன்றும், என்றும் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் நாகநாதன், சமூகநீதி தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் என்ற தலைப்பில் சூலூர் பாவேந்தர் பேரவைத் தலைவர் புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.அரவிந்த்ரமேஷ், எல்.செந்தில் இதயவர்மன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், ஒன்றிய நகர செயலாளர்கள் வீ.தமிழ்மணி, எம்.கே.தண்டபாணி, படப்பை ஆ.மனோகரன், ஜெ.சண்முகம், வே.கருணாநிதி, டி.பாபு, எஸ்.நரேந்திரன், ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, ப.ரவி, இரா.நரேஷ்கண்ணா, ஏ.ஆர்.டி.லோகநாதன், பையனூர் எம்.சேகர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் து.மூர்த்தி,  க.அன்புச்செல்வன், எம்.பி.மூர்த்தி, மு.ரஞ்சன், பேரூர் செயலாளர்கள் எஸ்.ஜபருல்லா, மு.தேவராஜ், ஆ.நடராஜன், ஜி.டி.யுவராஜ், ஆர்.சதீஷ்குமார், கோ.சத்தியமூர்த்தி, ஜி.கே.லோகநாதன், க.தேவேந்திரன், ஆர்.எஸ்.சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Anna Birthday Seminar ,Kanchi North District ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி